Posts

Showing posts from May, 2019

கனவில் வந்த கட்டில் கதை

நானும் என் ஆசை காதல் மனைவியும் புதிதாக கட்டிய எங்கள் வீட்டை நிரப்பும் வகையில் ஊர் உலகம் எல்லாம் திரிந்து புதிது புதிதாக சாமான்கள் , அலமாரிகள், போன்றவற்றை அந்தந்த அ...

நீ வேண்டும் எனக்கு.

காதலி கூந்தல் பட்டால் கறையாத மெழுகு மனம் உண்டா... காலையில் அவள் கண்களில் விழா காரியங்கள் கடப்பதுண்டா.. மாறி மாறி மழை பெய்தும்... மண் அதை வெறுப்பதுண்டா... மலர்கள் மங்கை கொ...

வேண்டியவை மட்டும் வேண்டாம்

எட்டு அடுக்கு மாளிகை வேண்டாம்.. ஏக்கம் இல்லா வாழ்க்கை வேண்டாம்.. பட்டு போல் படுக்கை வேண்டாம்.... பாதம் தொட பலபலப்பு வேண்டாம்.. எச்சுவை அறியாமை வேண்டாம்.. எவையாயினும் அணைக்காமை வேண்டாம்.. உடலிலே பேதம் வேண்டாம்.. உறங்க தான் உழைக்க வேண்டாம்.. ஒளிக்கு சந்திரன் சூரியன் வேண்டாம்.. ஊதினால் வெளிச்சம் மறைய வேண்டாம்.. கூடலில் பாக தேடல் வேண்டாம்.. குழந்தை குதிக்க காரணம் வேண்டாம் வேண்டுவன எல்லாம் வேண்டியவுடன் வேண்டாம்.. வேண்டாதவை ஆயின் வேண்டுதல் முன் வேண்டாம்... சுவையிலே இனிப்பு மட்டும் வேண்டாம்.. சுழற்றி நான் ஆடும் சுகம் மட்டும் வேண்டாம்.. வாழ்க்கையில் இன்பம் மட்டும் வேண்டாம்.. வாழ்வதற்கு வாடகை பணமாக வேண்டாம்.. வாடிய பின்னர் வழக்குகள் வேண்டாம்.. வாதமிருக்கும் மதம் மட்டும் வேண்டாம்.. யாவையும் யவையாயினும் யாவருக்கும் நடப்பன வேண்டும்..அவை இருப்பவன் இல்லாதவன் இன்றி இவ்வுலகில் இருக்கிறவன் இடத்திலேல்லாம் வேண்டும்..

கோலம் கலைக்க மனம் இல்லை

கோலம் போடும் போது உன் கோபுரம் சாயுதடி கோபுரத்தை தாங்கி பிடித்திடவே என் கைகள் ஏங்குதடி.... புள்ளி இரண்டு வைக்கையிலே என் எண்ணம் மாருதடி... பூவைப் பறித்திடவே புலம்பல் அதிகம் ஆகுதடி.. அரிசி மாவேடுத்து அங்கும் இங்கும் நீவைக்கையிலே.. அந்த சூரியனும் அழரி அடித்து வந்து உன்னை பார்ககையிலே.. வெளிச்சம் பட்டு உன் வேர்வை கொட்டும் போது என் பார்வை சிதறுமடி.. வாசலை நீ தெளிக்கும் போது உன் வளர்ந்த முடி வலது கண்ணில் படும் போது வாரி வாரி நீ விடும் பழக்கம் என்னை வதம் செய்வது வழக்கம்.. பச்சை புடவை எனில் அதை பக்குவமாய் எடுத்து இடுப்பில் சொருகி பாதம் முதல் பாதி மேனி தெரிய படர்ந்து வளர்ந்த பூக்கள் மட்டும் அதில் மறைய பாடலை இயற்றுவது போல் வாசலில் கூடலை இயற்றுகிறாய்... காலையும் வேண்டாம் களவு மனம் என் சொல்லி.. கண்களில் எனை ஏன் தேடுகிறாய்.. கடைசி வரிசையை வரும் போது ஏன் கவலையாய் நான் இருக்கும் இடத்தை பார்க்கின்றாய்... வாய்ச்சொல் வேண்டமடி காதலி.. காலையில் காண வராதே என்று வருந்தும் உன் மனதிற்கு வலி தாங்க இயலாது என்னால் இன்று ஒலிந்த நான் வெளியில் வரும் காட்சி கண்டு ... மகழ்ச்சியில் துள்ளுகிறது பூ வண்டு... நடிக்கும் ...

மனைவி

நீ காகத்தை வெள்ளை என்றாலும் சரி.. வெண்நீரைத் தவிர வேறு எதுவும் வெட்க தெரியாது என்றாலும் சரி... நாதிகவாதி ஆனாலும் சரி.. நமசிவாய என்றாலும் சரி.. வெளியுலகம் தெரியாது என்றாலும் சரி.. வெள்ளை யானைப் போல் இருப்பினும் சரி.. கற்றவள் எனினும் சரி... கல்லாதவள் எனினும் சரி.. மாநிறம் என்றாலும் சரி.... மச்ச நிறம் என்றாலும் சரி... மௌனக்காரி என்பினும் சரி.. முதுகை உடைப்பவள் எனினும் சரி.. முத்தம் தந்தாளும் சரி.. முடிவை கொடுப்பவள் ஆயினும் சரி... நித்தம் விரும்பும் வண்ணம் நீ இருந்தால் சரி..என்னை விரும்பிய வளாக இருந்தால் போதும்.

கலியுகம்

ஒரு தோட்டக்காரன் தன் இடத்தை ஒரு வியாபாரியிடம் விற்கிறான். இரண்டு நாட்கள் கழித்து அந்த வியாபாரி அவ்விடத்தில் தோண்டும் போது ஓர் புதையல் கிடைத்தது. அப்புதையலை எடுத்து கொண்டு அவன் தோட்டக்காரனிடம் செல்கிறான்.இப்புதையின் உரிமை உங்களை சாறும் இடம் மட்டுமே எனக்குரியது என்றான்.எனினும் தோட்டக்காரன் அதனை மறுத்து இடமே உமது ...என்றால் அவ்விடத்தில் உள்ள அனைத்தும் உம்மையே சாறும் என்றான். இருவரும் உமது உமது என சண்டைப்போட இறுதியில் தர்மரிடம் செல்கின்றனர்.தர்மர் இரு தரப்பையும் கேட்டு இரண்டு நாட்கள் கழித்து தீர்ப்பு வழங்குவதாக கூறினார்.அதே போல் இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் வரும் போது.. வியாபாரி இடம் எமது என்றால் அதில் உள்ளவையும் எமக்கே உரியது என்றான். தோட்டக்காரன் இடம் மட்டுமே அவரது அப்புதையல் எமது என்றான்.அன்று தர்மர் கூறுகிறார் இன்று முதல் என் யுகம் முடிந்து கலியுகம் தோன்றுகிறது என்று.

போரில் தோற்றேன்.

உன் உடல் ஒர் போர்ப்படை அதில் உடை என் வெற்றிக்கு தடை.. உன் வெட்கம் அது என் பலம்.. என் ஏக்கம் எல்லாம் என்று செல்வேன் களம்..? வேண்டாம் என்ற சங்கு ஊதி போரை ஆரம்பித்தோம்.. வேண்டிய உன் விரர்களை வெளியேதான் செல்லவைத்தோம்.. வால் கொண்டு குத்த வந்தாய் வாயால் அவற்றை சுவைத்தேன்.. கோள் கொண்டு கொல்ல வந்தாய் கூந்தல் குணத்தை அறிந்தேன்.. யானைப்படை எங்கு என்று தேடி நான் பார்த்தேன் .. யாவரும் அறியா வண்ணம் மத்தியில் மறைத்து வைத்தாய்.. பாலாடை எடுத்து கட்டி பாலிலே குதிக்க வந்தேன்... பஞ்சம் உள்ள பாலை நிலத்தில் பரவலாக விதைத்து வைத்தேன்.. குதிரை படை வந்த போது என் மீசையை முறுக்கி கொண்டேன். தூதரை கண்டவுடன் அவன் தோளிலே தட்டி கொண்டேன்.. மந்திரி கிடைத்தவுடன் மருவுலகம் அலைத்து சென்றேன்.. மறுபுறம் திரும்பிய போது என் மன்னனை இழந்துவிட்டேன்.. என் படை ஓட்டம் காணும் என்று எப்போதும் நான் எண்ணியதில்லை தன் குடை சாயும் என்று சந்தேகம் பட்டதில்லை.. தோல்வி என்ற ஒன்றை கலவி தருமாயின் கல்வி கற்று தோற்கவும் தயாராக தான் உள்ளேன்... ஒற்றை கோளை வைத்து என்னை கோழை ஆக்கிவிட்டாய்.. ஒற்றை பார்வை கொண்டு போரை போர்வையால் மூடிவிட்டாய்.. சிறைப்ப...

நீ

உணவில் சாதம் நீ.. உணர்வில் தாகம் நீ.. உழைப்பில் வேர்வை நீ.. உறவில் தாயும் நீ.. உண்ணத பார்வை நீ.. உருக்கும் கவிதை நீ.. உண்மை காவியம் நீ.. உலக அதிசயம் நீ.. உரையின் பொருள் நீ... உறக்கத்தில் கனவு நீ.. உப்பில்லா கடல் நீ... உயிருள்ள மடல் நீ.. உனக்காக வாழ்வேன் இனி உயிர் உள்ளவரை அதுவே என் பணி..