Posts

Showing posts from August, 2022

நானும்

ஏதேனும் கீரல் விழுந்தாலும் ஏதோ உடல்நடுங்கி விழுங்கி விடுவது ஏனோ எதையும் நினைக்க வழியில்ல வண்ணம் ஏக்கம் மட்டும் என்னுடன் இருப்பதேனோ விழியில் எந்த தேடலுமின்றி விதவையாக நிற்கும் மனம் சுற்றியறிய யாருமின்றி சுடுகாடு பிணம் போல் அனலும் நானும். அன்பு செலுத்தி கடக்க தான் நினைக்கிறேன் அரிவாள் போல் வெட்டி கிறிதே வலி ஆயிரம் அலைகள் என்னுள்ளே அடித்து வெடிக்கும் பாவமும் நானும். கண்ணீர் துடைக்கும் கைகள் வந்தால் கவனித்து நடித்து கலகம் செய்கிறேன் கற்பம் போல் வளரும் கவலை மரத்தை வெட்டி எறிய எப்படி.? வேரும் நானும். சோர்வு சேர்ந்து சோகங்கள் சூழும், சுகமே இல்லை என்ற எண்ணம் மட்டும் வாழ தூக்கிற்கு படி அளக்கும் பாதையும் நானும்.

கூண்டு

விழி மூடினாலே விரைந்து வந்துவிடுகிறது வீக்கம்.விதவயாய் வாழ்க்கை எப்போதோ மாறிவிட்டது.சன்னல் திறந்தால் கூட காற்று கம்பிகள் தாண்டி வர மறுக்கின்றன. கம்பியை தூக்கி எரிந்தாலும் அனல் என்னமோ குறைவதே இல்லை. அனாதையாக நிற்கின்றேன் என்று தெரியும். ஆறுதலான உறவுகள் இருந்தும் அதை மனம் ஏற்கவில்லை. ஆறுதலாய் இருந்தவை எல்லாம் என்னிடம் இருந்து விளக்கிடவே விரும்பிகிறேன் இப்போதெல்லாம். நான், அழுகை, ஏதோ இரண்டு, மூன்று கதை, என்னுள் ஏதோ செய்யும் இசை, ஏக்கம், வலி, காதல், களவி, ஏமாற்றம், வலி என்று நன்றாக தான் இருந்தேன். இப்போது சிரிக்க பழகி இருக்க கூடாது என்ற எண்ணம். இளைப்பாறிய இடம் தான் என்று மனம் ஏற்கவில்லை. சில உயிர்கள் உலகத்தில் வலி தாங்க பிறந்தவை போலும்.வரிசியில் என் பெயர் இருப்பதைப் பார்க்க மனம் மகிழ்கிறது. நான்கு பத்துகள் வாழ்ந்த பாதி கிழம், பாவம் என்னென்ன துன்பங்களை சுமக்கிறது தன்னுள் என்பதை எண்ணுவதா, இரண்டு பத்தில் நான் சுமப்பதே பெரிது என்று கர்வம் கொள்ளுவதா.? விடை இல்லை. யாரும் யாவரும் வேணடாம் என்பதே சிறந்த துணை என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன். போதுமடா வாழ்க்கை என்ற எப்போது நான் நினைத்து சளித்துவிட்...

பயந்தனை

இடித்தோறும் வந்து இதயம் வீங்கும் மடித்தோரம் பாரம் மயங்கி விழுக பிரிதல் வேண்டாமை என நானும் நொந்து சதிகள் யாவும் சேர்த்தெழுதும் கதையானேன் ஓடி ஒளிந்து கொண்டு ஓய்வெடுத்து இளைப்பாறி ஒதுங்கி சென்றாலும்  ஒருதலைப் படுத்தும் பாடு  உயர் எறிய ஆசை மலரும் பிறர் வாழ நான் செத்து பிறவி நாட்கள் கடப்பெத்தாம் யான் செய்த பாவமின்றி என்ன பதில் எனக்கு கூற.? சுற்றி இருக்கும் யாவுரையும் சுழல் போல் இழுத்து வந்து சுடுகாடு சேர்ப்பேனோ என சூழும் பாயத்தை யார் அறிவார் பிரிந்து சென்றவர் செய்தி எல்லாம் அனுப்பி வைத்தால் யாமும் அறிவேன், அடுத்த நாள் வருவதையே  அணையளவு தடுக்க ஆசை. யாரிடம் சொல்லி அழ ,இழப்பை யானே வந்து கொலைச் செய்தால்.? கூட்டம் போல் நாடகம் ஆட கொஞ்சம் கூட மசியாத மனம். நீங்காதே நீயே செல், போகதே துளைந்து வா வேண்டாமே விரைந்து போ செத்தொழி மனமே சிதைந்துடு தீர்வு இல்லை என் தோழி.

வலி

யாரிடமும் சொல்ல இயலாத ரணங்கள் யாவையும் தூக்கி தெளித்தெரிய இடம் தேடுக்கிறேன். ஏதேதோ எண்ணம் படற எங்கே செல்கிறேன் என்றே அறியாமல், கதறி அழும் குழந்தை ஆகிறேன் சில நேரம் பிரிய மனம் சில நேரம் கருகும் வனம் வாழ்க்கை அறை கதவுகளின் சாவிகளை மட்டும் துலைத்துவிட்டேன் எப்பேர்ப்பட்ட பிறவி எனது எதைஎதையோ இழந்து வந்து தாய் சென்று தம்பி சென்று இடிப்போல் அவள் செய்தி சென்று அனைத்தையும் தாங்கி நிற்கும் நிலம் ஆகிறேன் ஓடி ஒளிந்து கொண்டு பெயர் பாஷை தெரியது பிணம் போல் வாழ ஆசை வளர்கிறது வலி அவ்வாறு. ஏதுமே அமையவில்லை என்ன வாழ்க்கை என்ற எண்ணம் நிறைக்கிறது யாவருமே எனதில்லை யாருக்குமே நானில்லை என்பதே வழி ஆகிறது. காதலித்த அனைத்துமே காலில முள் போல் குத்துக்கிறது என்னடா வினை சாவை நோக்கி போகும் எனக்கு சந்தனக் கட்டைப் போல் மனம் எதற்கு.?