Posts

Showing posts from February, 2020

தம்பி

Image
அள்ளி அணைத்து விளையாடியிருப்பேன்.. அன்னை இல்லாத நேரத்தில் துள்ளி  உன்னைக் கிள்ளி அடித்து ஓடோடியிருப்பேன்.. வந்த போது புதிதாய்.. வயது எரிச்சல் கொண்டிருந்திருப்பேன்.. வளர்ந்த போது மெதுவாய் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.. எத்தனை அடி அடித்தும் கோபம் மறைய கண்டிருப்பேன்.. யாவரும் அறியா வண்ணம் மோதல்களை மறைக்க பழகி இருப்பேன்.. அழுக நான் நேரிட்டால்  கண்கள் கலங்கி நீ துடைக்க உணர்ந்திருக்கிறேன்... அம்மை அப்பன் அறியாததை நீ அறிய வைத்திருப்பேன்.. என் பாலைப் பகிர்ந்தவனே என்னுள் நிரைந்தவனே.. இரண்டாண்டு இடைவெளி தவிர வேறு என்ன கண்டேன் நான்.. என்னுடன் பிறந்த தாய் தந்தை நீ தானே .. என்னை இசைக்கும் அன்பு தம்பி...!    

எம்மண்

Image
தமிழ் நாட்டின் பெருமைகள் பக்கம் ஒன்று போதிடுமா என் மண்ணின் பெருமைகளை எழுதிட.. பாதியாவது ஆகிடுமா.. என் ஆயுள் வரை நான் அதில் உறைந்திட..  மன்னாதி மன்னன் எல்லாம் மண்டியிட்ட மண் ஐயா.. மரியாதை தந்துவிட்டால் மகுடம் தரும் விண் ஐயா.. பசி என்று சொல்லி விட்டால் பருத்தி படுக்கைமேலே  பச்சரிசி தாரும் ஐயா பாதகம் செய்ய வந்தால் பாவம் உயிர் ஏற்றும் ஊர் ஐயா. தாயும் தாயகமும் தமிழ் போல்  தான் ஐயா.. தவிக்கும் வயிற்றிற்கு பால் கொடுப்பாள் என் தாய் ஐயா... சாதி மதம் இங்கே சாக்கடை தான் ஐயா சாவதற்கும் தயங்கா வீரன் நான் ஐயா.. யாவரும் போற்றி பாடும் புண்ணிய பூமி ஐயா.. "யாதும் ஊரே "என்றவன் என் புலவன் - இறைவன் ஐயா..! வள்ளுவமே வாழ்க்கை ஐயா.. வானில் இருக்கிறோம் அதை வாழ்பவர் அறிவோம் ஐயா...