Posts

Showing posts from July, 2021

சமையல்

திருமணம் ஆன புதிதில் தோசையை திருப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள். சமைக்க தெரியாத என்றேன். இருப்புறமும் தலை அசைத்தால். சிறித்துக்கொண்டே பாடத்தை தொடங்கினேன். கரண்டியிலே இருகை, அவள் இடையிலே என் கை, மாவினைத் தொட்டெடுத்து கல்லிலே வட்டமிட, கால் நான்கு திட்டமிட சிறிப்பினை உணர்ந்த நான் தோசையை திருப்பினேன். இவ்வளவு தான் என்றேன். ஒன்று போதுமா.? என அவள் சிறிக்க ஒதுங்கி நின்ற நான் உடைந்து தான் போனேன்.

காதல்

மாதம் இது எதுவென்றே மனம் அறிய காலம் தான் ஓடுவதோ, தீண்டல், கைத் தொடுவதெல்லாம் தீயாயினும் வலித்திசை மாறுவதோ உடுப்பு உண்ணல் யாம் இழக்க உள்ளம் தான் மகழ்ந்தடுவதோ காதல் நோயை யாம் அணைக்க கண்முடியும் முகம் காண்பதுவோ. பெற்ற அப்பன் இணைப்பில்லை, பெற்றெடுத்தவள் நினைப்பில்லை, கருவறை பகிர்ந்தோன் கணக்கில்லை இது தான் காதல் கலைகாவியமோ.             

ஆடை

வெள்ளை நிற சுடிதார் அணிந்து வந்து எப்பிடி இருக்கிறது என்று கேட்டாள். நன்றாக உள்ளது என்றேன். கருப்பு நிறம் அணிந்தாள். மீண்டும் அதே பதில் அளித்தேன். சிவப்பு, பச்சை என வண்ணங்கள் மாறினாள். என் பதில் மாறவில்லை. எல்லாமே எப்பிடி நல்லா இருக்கும்.. ஏதாவது குறைச்சல் இருக்கும் என்றாள். தேய்பிறை வளர்பிறை எல்லாம் நிலவின் அழகை குறைத்திடுமா. என்றேன். அவள் சிரிக்க நான் சிதைந்தேன்.

மார்ப்புண்டு மறவாதீர்.

கன்னிவத்தான்கோட்டையில் இருந்து புறநகர் செல்லும் பாதையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே தான் உள்ளது அந்த தள்ளுவண்டி கடை. அரசின் புளியமரங்கள் உதவி தர, நல்ல நிழல் படைத்த இடம். மூன்று பக்கம் வழிப்பிரிந்து சாலை ஓடும். பள்ளி, வங்கி, காவல் வளாகம், பூக்கடை என நல்ல கடைகள் நிறைந்த தெருக்களும்,வீடுகளும், அடுக்குமாடியில் வாடகை வாசமும் தூக்கும் பகுதி அது. பச்சை விளக்கு எறிய தொடங்கினால்  அடுப்பும் எறிய தொடங்கும். மல்லிகை பூ போல இட்லி என்பார்களே, ஆம் உண்மையில் ஈஸ்ட் மாவில் நாட்டியம் ஆடுவதால் அவ்வாறே இருக்கும். வீட்டில் மூன்று என்போர் இங்கே ஐந்து என்பர், ஐந்து என்போர் பத்து என்பர். பசி ஆற்றா படி உணவு அது. ருசி தேனைத் தோற்கடிக்கும், தோசை நாவிடம் திசை கேட்கும். துணியில் மாவு ஒட்டவே கூடாது என்பதற்க்காக மல்லு துணியை இருபது ரூபாய் தையல் காரரிடம் கொடுத்து சென்ற வாரம் தான் புதிப்பித்தாள் செல்லம்மா. கணவர் மின்சாரம், ஒரு ஆட்டோ ஓட்டுநர், அவர் பிறந்தபோது தான் அவரது ஊருக்கு மின்சாரம் வந்ததாம், எனவே அதுவே பெயர் ஆயிற்று. அவர்களுக்கு ஒரு பையன் கதிர்வேல், ஒரு பெண் தாமரை. கதிர்வேலும், தாமரையும் பள்ளி முடித்து...