நீ
துன்பம் நான் பிறந்தப் போதிலும் தொப்பில் கொடி அறுக்கையில் துடித்து எனக்கு வலிக்குமென்று அலறும் என் அன்னை நீ, முதுகின் மேல் என்னை சுமந்த மூச்சை தரும் என்னை தந்தை நீ தூரத்தில் வானம் துயரத்தில் நான் சோகங்கள் சூளும் போது என்னை தனிக்கும் மழை மேகம் நீ. தொட்டிலிட்டவள் வீதியில் கட்டிலில் செல்லும் போது என்னுடன் இருந்த வலிதான் நீ துலைந்தேன் என்று நினைத்தப்போது தூக்கு கயிறை பிடுங்கி வீசிய வளர்ப்பு தாய் நீ. நான் தூங்கும் போது என் கண்ணீர் நீ எழுகையில் என் புத்தகம் நீ. பத்தாம் வகுப்பில் அப்பாவின் பாக்டில் திருடிய பானிப்பூரியின் பத்து ரூபாய் நீ. பன்னிரெண்டில் படியிலிருந்து என்னை நோட்டமிடும் பாக்யா எனும் என் பட்டப்பெயர் நீ. விடைத்தாளில் தெரிந்தே நான் எழுதிய பிழை நீ விடைபப்பெறும் போதும் நணபன் பகிர்ந்த தொலைப்பேசி எ(ண்) நீ. ஆழியில் எனுக்கு மட்டும் கிடைக்கும் முத்து நீ அழிகில் நிலவின் வெளிச்சம் நீ முதல் முதலில் மிதிவண்டி ஓட்டி விழும்போது முட்டி மேல் எழுந்த தழும்பு நீ முத்தம் தர கிட்ட வருகையில் முஞ்சைத் திருப்பும் குழந்தை நீ வெட்டி கதைப் பேசும் போது என் பாட்டி சொல்லும் கு...