அவள்❤️
அவள் இவ்வளவு வலிகளைத் தாங்குகிறாள் என்பதே எனக்கு பெரும் வலிகளைத் தருகிறது. உனக்கு காதல் இருக்க வேண்டும் அது எனக்கு தீராத வலியைத் தரும் என்று முன்பே எனக்கு தெரியும். ஆனால் நீயும் என் போல் கடலில் தத்தளிக்கும் கட்டுமரமாக இருப்பது என்னடி நியாயம்.? இதையெல்லாம் தாங்கும் இதயமாடி உனது. இமை இடை வளராத குழந்தையடி நீ, இன்பம் காண்பாள் என இத்தனை நாள் பீத்தி கொண்டிருந்தேனே. என்னிடம் சொல்ல என்ன தயக்கம் உனக்கு.எதிலும் சுவையாய் தெரிந்தாய், என் வானில் நிலவாய் தெரிந்தாய், கவிதை வரைந்தேன், கண்ணீர் விட்டேன், ஏக்கம் கொண்டேன், சாக திணிந்தேன், சாட்டை எடுத்து அடித்து கொண்டேன், எதிலும் நீ என எண்ணம் கொண்டேன். இருப்பினும் நான் அறிந்திருந்தேன், என்னைப் போல் நீ உணரவில்லை என்று. ஆனால் என்னைப் போல் தான் நீயும் என்பது சாபமாய் தெரிகிறது எனக்கு. கடவுளிடம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை எனக்கு, வேண்டி கொள்கிறேன் நிச்சயம் உன் ஆசை கரைச் சேரட்டும். உன்னை என்னால் இப்படி காண இயலுவது இல்லை. கட்டி அணைத்து அழுகாதே கண்ணீர் துடைக்க நான் உண்டு என கூற ஆசையிருப்பினும் நீயே தடுக்கிறாய். புரிகிறது காரணிகள்.கதைகள் எல்லாம் உன் கைச் சேரு...