Posts

Showing posts from August, 2021

குளிர்.

மழை வரும் கனமெல்லாம் அவள் மடியில் படுத்துறங்க ஆசைப் படுகிறேன். குளிரிலே என் தசை ஆட, நடுக்கம், என் நகத்தையும் நகர்த்துவதை தவிர்க்க, அவள் மடி வெப்பம் அணைக்க ஆசைப் படுகிறேன். என்ன செய்ய..? நிலவுக்கும் குளிர் அடிக்கும் போல , என் போர்வையையும் சேர்த்து, அவள் தலைவரை போர்த்தி உறங்குகிறாள். அன்று கூட அம்மாவாசை தான்.

பூவிருக்குமிடம்.

செடியிலிருந்த ஒற்றைப் பூவை பறித்து அவளிடம் கொடுத்தேன். முகத்தை சுளித்து, “செடிகளுக்கு அழகு  பூக்கள் தானே " என்றாள். செடிகளுக்கு அழகு பூக்கள் தான், என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் பூக்களுக்கு அழகு செடிகள் இல்லை என்றேன். சிந்தித்தவாரே இருந்த அவளை திருப்பி ,பூவை அவள் கூந்தலில் வைத்தேன். புரிந்து கொண்டாள் போலும் புன்னகைத்தாள்.

வானவில் 🌈.

வானவிலில் சிகப்பு நிறம் தான் அதிகம் படர்ந்தது என்றேன். அப்படியேல்லாம் இல்லை, என்றாள் அவள். அவள் கைகளை மடக்கி மருதாணி சிவந்ததைக் காண்பித்தேன். சிரித்து கொண்டே என் தலையில்  கொட்டிய அவள் முகம், சிவந்தததிலும் உறுதிப்படுத்திக் கொண்டேன். என் சிந்தனை உண்மை தான் போலாய்..!

ஊதுவது நின்றுவிட்டால்

அண்ணா, இப்போது தான் “மலையில் இருந்து இறங்கி கொண்டு இருக்கிறோம்" என்றாள் இந்திரா. ம்..சரி பொறுமையா வாங்க நான் காத்திருக்கேன் என்று சொல்லயவாரு இணைப்பைத் துண்டித்து, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிதிற்கு நடையை கட்டினான் கௌதம். பெண்கள் கம்மியாக இருப்பதைக் காண முடிந்தது. மாலை நேரம், கல்லூரிகள் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்ற அர்ப்ப புத்தி நெஞ்சில் உதித்தது அவனுக்கு. சாலையை கடக்கையில் எப்போதும் இருக்கும் நடமாடும் ஏடிஎம் இயந்திர வண்டி இல்லை,  200 ரூபாய்க்காக நடு வீதியில் நின்று விளம்பர காகிதங்கள் கொடுக்கும் கல்லூரி மாணவர்கள் காணவில்லை. கிட்டத்தட்ட அவர்கள் வர 1 மணி நேரம் ஆகும், என்ன செய்ய, என்று சிந்தித்து காந்திபுரம் புது பேருந்து நிலையம் அடைந்தான் அவன். நின்றது ஈரோடு தனியார் பேருந்து, SCP. எப்போது எடுப்பீங்க என்று  அவன் கேட்க, நடத்துனர் தண்ணீர் குடித்தப்படி  1 என்று விரல் செய்கை செய்தார். மகிழ்ச்சி, 20 ரூபாய் மிச்சம், காரல் மார்க்சின் படத்தை தொலைபேசியின் முன் பகுதியில் பார்த்து ஒரு வெட்க பார்வை. சுத்தி பார்த்தான். அந்த பேருந்து நிலையத்திலிருக்கும்  ஒவ்வொரு த...