பூவிருக்குமிடம்.

செடியிலிருந்த ஒற்றைப்
பூவை பறித்து அவளிடம் கொடுத்தேன்.

முகத்தை சுளித்து,
“செடிகளுக்கு அழகு  பூக்கள் தானே " என்றாள்.

செடிகளுக்கு அழகு பூக்கள் தான், என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை,
ஆனால் பூக்களுக்கு அழகு செடிகள் இல்லை என்றேன்.

சிந்தித்தவாரே இருந்த அவளை
திருப்பி ,பூவை அவள் கூந்தலில் வைத்தேன்.
புரிந்து கொண்டாள்
போலும் புன்னகைத்தாள்.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்