ஏதோ சில நேரங்களில் வாழ்க்கை சோர்வடைந்துவிடுகிறது. ஏதும் இல்லை என்ற மனநிலை சில நேரம், ஏதுமே வேண்டாம் என்ற மன நிலை சில நேரம்,யோசனைக்கு பசி இல்லை என்ற நிலையும், யோசனையே பேய் போல் தொடரும் நிலையும்; வாழ்வே வேண்டாதா விருப்பம் என்றும், சில நம்பிக்கைகள் வேண்டும் என்றும்; ரயில் தண்டவாளம் போல் எதிர்திசையில் நீள்கிறது.
காதல், கவிதைகள், முத்தங்கள், முற்போக்கு,
கடவுள், கணிதம், மேதை, கட்டுரை, அரசியல்,
சினம், சினிமா, ஊடல், தேடல், பாடல், படுக்கை, பிறப்பு, இறப்பு, இழப்பு என அனைத்துமே நான் பார்த்து விட்டாதாக எண்ணம் வரும். சில நேரம் முத்தங்கள் பத்தவில்லை, யாரோரு மேனி மடல் தொட்டத்தில்லை, வேலை இல்லை, விளம்பரம் இல்லை, விமர்சனம் இல்லை, காதல் இல்லை, கற்புகலையவில்லை, ஆசைகள் அழியவில்லை, புத்தகம் பக்கம் மாறவில்லை, மனைவி மக்கள் பார்க்கவில்லை,புத்திரன் இல்லை, புன்முருவல் இல்லை, இதுப்போன்று ஆலோசனை அறிந்தும் கூட மனம் ஏதோ நிம்மதி நாடவேயில்லை.
ஏதோ சமயங்களில் சிரிக்கிறேன்,
சில சமயம் அழுக்கிறேன்..
பிடித்தவை செய்தாலும், பிடித்தவர் உடன் இருந்தாலும்,
மனம் தனிமையை அணைக்கிறது.
ஏதோ ஒரு மீளயியலாத இதயம் எனக்குள்.
அதற்குள் ஒன்றுமில்லை என்பதே கவலை.
Comments
Post a Comment