அச்சிலை அழகவள்

முத்திரை பதிக்க முதுகிலே ஏற
முத்தமிட்டு எனக்கு மூச்சும் தான் வாங்க
அச்சிலை அழகவள்
அங்கம் ஆயிரம் கவி பாட
கம்பன், கவிஞன் எல்லாம் காலைத் தேடி 
இசை மீட்ட
கற்று பெற்றவன் எல்லாம்
மூளை மயங்கி முகவரி அறிய
முகம் பார்த்து சிரித்துவிட்டால்
இயங்குமா இதயமென ஆராய 
அருகிலே சென்றேன்.

முந்தானை மூடி இருக்க
முப்பேர்ப் படை அவள் கண்ணாக இருக்க
அம்பெரிய தேவையில்லை
அவள் கண் அசைத்தால் போதுமானது.

கண்ணம் எனும் பெரு வெடிப்பு
காதல் அது நிற்கும் என் துடிப்பு
ஏதும் செயாத உதடு தானே
உண்மையில் நான் மண்ணாக காரணமானது.



கீழே எல்லாம் வேர்ருலகம்
அந்த வளைவு ஒன்றில்
என் உதடும்
இணைத்து இழுத்திட ஆசைப்பட்டு
இருகி போனேன் 
இடுப்பல்ல இடி.

தென்னங் கொழையிரண்டு
தேன் சுவை பிரண்டு
தேரிழுத்து போர் செய்வேன்
பூவே உன் மார்ப்பாடா மனம் ஏங்கும்


பூவோடு புதிர் எதற்கு
பூட்டிட்ட கனி எதற்கு
கீழோடு நான் சேர்வேன்
உன் தொடையிடையே ஊஞ்சல் ஆட

தூக்கம் தனை கெடுத்தாய்
தூண்டில் எனை இழுத்தாய்
தூரம் நின்று நீ துளிர்த்தால்
தூக்கு போல வலி துரத்துதடி

உடலும் என்னானும்
உறுப்பும் என்னானும்
உதிரம் என்னானும்
என் உலகமே உன் உயிர்தானே.











Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்