வாழ்க்கை கற்றுத் தருகிறது.
எப்பவும் போல் போரடாதான் வேண்டி உள்ளது...அந்த இரண்டு மணிநேர பயணத்திற்கு சீட் பிடிக்கும் போராட்டம்..
நானும் என் தம்பியும் ,முதல் பேருந்தில் சீட் பிடிக்க போராடி தோற்றுவிட்டோம்.என் வாட்ச்
உடைந்தது தான் மிச்சம்.நான் சிறு தூரம்
நின்று ..பஸ் சீட் பிடிக்க போராடனும்,
கல்லூரில சீட் கிடைக்க போராடனும்,
வேலை கிடைக்க போராடனும்,
பொண்ணுக்கு போராடனும்,
புல்ல பெத்துக்க போராடனும்,..
போராடாம எதுமே கிடைக்காது போலனு
நினச்சுகிட்ட இருந்தேன் அடுத்த பஸ் வந்துசு...
உள்ள ஓடு தம்பி ஓடு...இல்லன இரண்டு மணி
நேரம் நிக்கனு...நு ஒ ஒரு குரல்..
அப்பறம் என்ன பஸ் பத்து நிமிஷம் கட்டிபிடிச்சி,அடிச்சிபிடிச்சி,சீட் போட்டான்
ஏன் தம்பி...
அப்பவும் நான் போல சீட் பிடிக்க..
கொஞ்சம் தைரியம்..தம்பியுடையான்
படைக்கு அஞ்சான்.
உள்ள வந்து கடைசிய உட்காந்தே..
தம்பிக்கிட்ட life is a race..நம்ம ஓடனும் நு
சொன்ன..ஓடன பலன் தான் இப்ப உட்காந்து
இருக்கோம் நு சொன்ன..
அவனும் ஆமா போட்டான்.
பஸ் நகர்ந்துசு.... அம்மா அப்பா..
எல்லா நலம் விசாரிச்சாங்க..சீட் கிடச்சுதா
இல்லன இறங்கிடு.. அடுத்த பஸ்ல வா..
இல்லன கவர்மெண்ட் பஸ்ல வா..நு சொன்னாங்க..
நான் ஒன்னும் பிரச்சினை இல்லனு
சொல்லிட்டேன்.
பஸ் புல்ல கூட்டம்..நிக்க கூட இடம் இல்லை.
பஸ் எடுத்து இருபது நிமிஷம் இருக்கும்
ஒரு ஸ்டாப்..எனக்கு தெரிஞ்ச ஒரு
கண் தெரியாத நண்பன் ஏறின..
நான் என்ன அறியாம எழுந்து
அவன வா உக்காரு நு சொல்லிட்டு
எழுந்து டேன்..
அவன் கூட வந்த நண்பருக்கு
ஏன் தம்பி வழிவிட்டு இரண்டு பேரும்
நின்னுடோம்..
ஒரு அரைமணி நேரம் கழிச்சி
அப்பா போன் பன்னாரு
திரும்பவும் விசாரிப்பு..
அப்ப அவரு தீடீர்னு உக்காந்துட்டல்ல
நு கேட்க நான் உக்காந்துட்டேன் நு
சொல்லிட்டேன்...
அப்பறம் யோசிச்சு பார்த்த
போராடி சீட் பிடிச்சேன்..
20 நிமிஷம் தான் சந்தோஷமா இருந்துசு..
போரடாம ஒரு பொய்
போரடாம எழுந்தது..அப்பா,என் நண்பன்,அவர் நண்பன், நான், என் தம்பி அஞ்சு பேரும்
சந்தோஷமா தான் இருந்தோம்...
போராடி வெற்றி பெறுவது மட்டும் சந்தோஷம்
இல்ல..
மத்தவங்கள சந்தோஷம் படுத்தரதுதான்
சந்தோஷம் தான் நு சொல்லி குடுதுசு
வாழ்க்கை..
#வாழ்க்கை கற்று தருகிறது.
Comments
Post a Comment