வளர்ப்பு தாய்
பால் கொடுத்தவள் பாதியில் விட்ட போதும் எனக்கு தோள் கொடுத்து தூக்கி விட்டவள் நீ.. அம்மா
எனக்கு துயரம் ஏதும் நேரிட்டால்
தும்பலைக் கூட தள்ளி வைத்து ,
என் தேகம் காத்த தெய்வம் நீ..
உனக்கு என்ன நான் செய்ய ?
என் பிறவி அனைத்தும் உனக்கு தரும் வாய்ப்பு
இருந்தாலும் ,வட்டியைக் கூட என்னால் செலுத்த இயலுமொ..?
அம்மா...
என் அன்னையை மிஞ்சிய உன்னை நான் என்னவேன்று குறிப்பெழுத....
தேகம் தந்தவள் தாய் எனில் ,
எனக்காக பல தாயகம் செய்த
உன்னை என் தாயினும் மேல்
வைத்து தாளாட்டி கொஞ்ச வரம்
கேட்கிறேன்.
Comments
Post a Comment